மட்டக்களப்பில் இளம்பெண் தற்கொலை செய்த பரிதாபம்!!

1158

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு நகர்புறத்தில் உள்ள பெரியஉப்போடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஞானச்செல்வம் தக்ஸா என்னும் 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.



தற்கொலைக்கான காரணம் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மனஅழுத்ததில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த பெண் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவி என்பதுடன், இவரின் கணவர் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.