மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

866

பூண்டுலோயாவில்..

பூண்டுலோயா பாலுவத்த பகுதியில் வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். அக்கரப்பத்தனை உருலவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவ்யராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிந்த சிறுமியின் சடலம் கொத்மலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.