யாழ் நோக்கி சென்ற இருவருக்கு நேர்ந்த கதி!!

1216

திருகோணமலயில்..

திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – அனுராதபுரம் ஏ – 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.