வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

7601


வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.



ஓமந்தையில் வெதுப்பகம் ஒன்றை நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, இவ் விபத்து ஏற்பட்டது.





இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற தினேசன் பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.