இலங்கையில்..
இலங்கையில் இருந்து இருவர் தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று (25.09.2023) அதிகாலை, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவரை ஏற்றிச் சென்ற படகு தமிழகம் – தனுஸ்கோடி கரையில் அவர்களை இறக்கி விட்டுள்ளது.
58 மற்றும் 60 வயதுடையவர்களே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தமிழகம் சென்ற இருவரையும் தமிழகப் பொலிஸார் மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். சமீப காலமாக வடக்கிலிருந்து ஒருசிலர்
தமிழகத்தில் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகின்றது.