திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரி. இவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரேணுகா. இவர் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் செப்டம்பர் 23ம் தேதி அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சொல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கல் என பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் ரேணுகா கடைசியாக அதே ஊரைச் சேர்ந்த பாரதி நகர் நீலமேகம் என்பவரின் மகன் யோகேஸ்வரனிடம் போனில் பேசியுள்ளார். இந்த எண்ணை வைத்து யோகேஸ்வரனிடம் விசாரானி செய்தனர். அவருடைய முன்னுக்கு பின்னான பதிலில் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. யோகேஸ்வரன் ரேணுகாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். யோகேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்பவர். இவரும், ரேணுகாவும் 6 மாதங்களாக காதலித்து வந்தனர். நேற்று முன்தினம் சென்னாவரம் கிராமத்தில் இருவரும் தனிமையில் சந்தித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரத்தில் யோகேஸ்வரன் ரேணுகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவினால் அவரது கழுத்தை இறுக்கினார். ரேணுகா உயிரிழந்ததும் அதிர்ச்சியடைந்து ரேணுகாவின் பிணத்தை அங்குள்ள முட்புதரிலேயே வீசிவிட்டு தப்பிஓடிவந்ததை ஒப்புக் கொண்டார்.
இதன் பேரில் இரவு முட்புதரில் இருந்த ரேணுகா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி கழுத்தை நெரித்து காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.