திருமண மண்டபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் : 100 பேர் பலியான சோகம்!!

947

ஈராக்கில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்ததுட, 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



மணமக்கள் நடனமாடிக்கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன

இந்நிலையில் எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிற நிலையில் ,உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.