இந்தியாவில்..

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, அரை நிர்வாணத்துடன் வீடு வீடாக உதவி கேட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தின் பட்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ரத்தப்போக்குடன் வீடு வீடாக சென்று உதவி கேட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் மயக்கம் தெளிந்த பின்னர் அரை நிர்வாணத்துடனே அவர் சாலையில் உதவி கோருவது அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

தெருவில் அரை நிர்வாணத்துடன் நடந்த அவர் ஆசிரமம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு மதகுரு ஒருவர் சிறுமியின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரது உடலை துணியால் மறைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயிருந்தது தெரியவந்ததுள்ளது.இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சிறுமி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
India, Madhya Pradesh: 12 years old girl raped and walked semi naked for 2½ hours. Locals denied to help. Even the Indian media is not paying attention to this.@5Pillarsuk @9NewsAUS @hrw @DerekJGrossman @nytimes @arabnews @cnni @AJEnglish @RebelNews_USA @KenRoth @Laurenwalteru pic.twitter.com/UkOTpmniwM
— Timeline Info (@tltimelineinfo) September 27, 2023





