தமிழர் பகுதியில் தனியே நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

1041

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த,



தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை பெண்ணை கடத்திச் சென்ற மூவர் குறித்த தகவல் இதுவரை இல்லை எனவும் பூநகரி பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.