இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு.. மகனை காப்பாற்ற குண்டுகளை ஏந்திய பெற்றோர்.. கலங்கவைக்கும் சோகம்.!!

414

இஸ்ரேலில்..

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் மகனை காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த பெற்றோரின் செயல் கண்கலங்க வைத்துள்ளது. பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன.

இந்நிலையில், கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் போரை அறிவித்து, இரு தரப்பினருக்கும் இடையே 3 நாள்களாக மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்த உச்சகட்டமாக போரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 -யைக் கடந்தது. அதுமட்டுமல்லாமல், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வெளி தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

அப்போது, இஸ்ரேலில் உள்ள ஷ்லோமி மத்தியாஸ், அவரது மனைவி டெபோரோ மற்றும் அவர்களின் 16 வயது மகன் ரோத்தம் ஆகியோர் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் ஒரு அறைக்குள் பதுங்கினர்.

ஆனால், தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இவர்கள் இருக்கும் இடத்திற்கும் வந்து துப்ப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்பு, கதவை உடைத்து வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட ஆரம்பித்த போது, பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போல் படுத்துக் கொண்டனர். இதனால், பெற்றோர் இருவரின் மீதும் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர்.

ஆனாலும், இவர்களின் 16 வயது மகன் வயிற்றின் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம், கண்கலங்க வைத்துள்ளது.