கல்யாணமாகி ஒரு மாதம் தான்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

748

சேலத்தில்..

சேலம் மாவட்டம், கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்வாணன். இவர் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருச்செங்கோடு பகுதியில் வசித்து வரும் ஜெகப்பிரியாவுக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது.



அக்டோபர் 4ம் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் இருந்தபோது, வயிற்று வலியால் துடித்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். தனக்கு வயிற்று வலியும், வாந்தியும் வருவதாக ஜெகப்பிரியா கூறிய நிலையில், அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போதும் வயிற்று வலி சரியாகத்தால் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜெகப்பிரியாவை அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து, அவரிடம் வயிற்று வலிக்கான காரணம் குறித்து கேட்டனர்.

அப்போது, ஜெயப்பிரியா அக்டோபர் 3ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், இது கணவர் வீட்டினருக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகப்பிரியா உயிரிழந்தார்.

திருமணமாகி ஒரே ஒரு மாதம் மட்டும் ஆன நிலையில் ஜெகப்பிரியாவின் திடீர் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஜெகப்பிரியா ஏன் விஷம் அருந்தினார் என்பது குறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டாயத்திருமணமா, வேறு ஏதும் காதல் விவகாரமா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமாகி 30 நாட்களில் புது மணப்பெண் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.