சுமார் 7 மணிநேரம் இறந்த உடல்களுக்கு அடியில் மறைந்து உயிர் பிழைத்த இளம்பெண்!!

281

இஸ்ரேலில்..

இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடியில் சுமார் 7 மணி நேரம் பதுங்கி இருந்து உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலின் கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியில் இசை கச்சேரி நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட மொத்தம் 250 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த திடீர் தாக்குதல் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடியில் சுமார் 7 மணி நேரம் பதுங்கி இருந்து உயிர் பிழைத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் இசை கச்சேரியில் இருந்து தப்பியோடியவர்களை பின்தொடர்ந்து வந்த போது லீ சசி என்ற இளம்பெண் உட்பட 35 பேர் கொண்ட குழு ஒன்று வெடிகுண்டு புகலிடம் ஒன்றில் பதுங்கியுள்ளனர்.

இருப்பினும் ஹமாஸ் அமைப்பினர் அப்பகுதி மீது தூப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லீ சசி என்ற இளம்பெண் உயிர் பிழைத்துள்ளார்.

இவர் உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து உயிர் பிழைத்தேன் என மிகவும் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் இவ்வாறு உயிர் பிழைத்துள்ளனர்.

இது தொடர்பான தகவலை லீ சசி இன்ஸ்டாகிராமில் தனது தோழியுடன் பகிர்ந்துள்ளார். அதில், கிட்டத்தட்ட 7 மணி நேரம் இவ்வாறு பதுங்கி இருந்தோம், நான் இதை விளையாட்டாக கூறவில்லை என்று தெரிவித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் சான்றாக அவர் வெளியிட்டுள்ளார்.