யாழில்..
தன்னை திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக காதலி அனுப்பிய குறுந்தகவலால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.
காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் இளைஞரின் தந்தை கண்டித்துள்ளார். பெண்ணுடன் கதைக்க வேண்டாம் என மகனை கண்டித்ததுடன், வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என பெண் வீட்டாரிடமும் கூறியுள்ளார். அது காதலிக்கு பிடிக்கவில்லை. தன்னை தவிர்த்து விட இப்படி நாடகம் ஆடுகிறார்கள் என சந்தேகித்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாக பெண் தனது காதலனுக்கு தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார்.இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.