வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு!!

4805

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று (19.10.2023) காலை அடையாளம் தெரியாத முதயவர் ஒருவரது சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும எனவும் இதுவரை யாரும் சடலத்திற்கு உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுடன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.