குழந்தையை பணயக் கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்!!

1988

கம்பஹாவில்..

கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை வன்புணர்வுககு உட்படுத்தியதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.



குழந்தையை தரையில் அடிக்கப் போவதாக மிரட்டியே இந்த குற்ற செயல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.