யாழில்..
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில், 10 வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் நேற்றிரவு (27.10.2023) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றையதினம் (27) முச்சக்கரவண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தினை பருக்கியுள்ளதாக தெரியவருகிறது.இது தொடர்பாக சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைபதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.