மனைவி இறந்தது தெரியாமல் 4 நாட்களாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்!!

697

விருத்தாச்சலத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்து விட்ட நிலையில் அவரது அழுகிய உடலுடன் கணவர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59). இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக் கொள்வதில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில், தைராய்டு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனுசியா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அது தெரியாமல் மூர்த்தி தனியறையிலேயே வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, வார விடுமுறைக்காக அவரது மூத்த மகள் நேற்று இரவு வீட்டிற்கு வந்த நிலையில், வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்து அனுசியாவை பார்க்க சென்றார்.

அப்போது, அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி இறந்ததுகூட தெரியாமல் வீட்டிலேயே வசித்து வந்த மூர்த்தியை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.