பூநகரியில்..
பூநகரி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்று(30) இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று மதியம் 12மணியளவில் நாச்சிக்குடா சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹோட்டலுக்கு முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளிளும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.