உலகக்கிண்ண முட்டாள்கள் என இங்கிலாந்தை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!

440

Eng

இங்கிலாந்து அணி உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஊடகங்களும், ரசிகர்களும் இங்கிலாந்து அணியை திட்டிவருகின்றனர்.

பிரேசிலில் நடைபெற்று வரும் 20வது உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே இங்கிலாந்து அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொண்டது. அதில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்ந்தது.

2வது போட்டியில் உருகுவேயை எதிர்கொண்ட இங்கிலாந்து அந்தப் போட்டியிலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில் நேற்று இத்தாலியும் கோஸ்டாரிகாவும் மோதின.

அப்போட்டியில் கோஸ்டாரிகா வெற்றி பெற்றால் இங்கிலாந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். அதே சமயம் இத்தாலி வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு சிறிது வாய்ப்பு இருக்கும் என்ற நிலை இருந்தது.

ஆனால் கோஸ்டாரிகாவிடம் இத்தாலி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி பரிதாபமாக உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது.

1958 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ஊடகங்களும், ரசிகர்களும் இங்கிலாந்து அணி ஒரு முட்டாள் அணி, கடுப்பேற்றும் அணி என்று திட்டிவருகின்றனர்.

ஏற்கெனவே நடப்பு சம்பியனான ஸ்பெயினும் முதல் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வெளியேறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.