பிரபல திரைப்பட நடிகை எடுத்த விபரீத முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

1403

கேரளத்தில்..

சமீபமாக மன அழுத்தம் காரணமாக நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கேரளத்தில் பிரபல மலையாள திரைப்பட நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மலையாள திரைப்பட ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய துவங்கிய ரெஞ்சுஷா மேனன், தன்னுடைய முயற்சியினால் மலையாள திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார்.

அற்புததீவு, பாம்பே மார்ச், காரியஸ்தன், ஒன் வே டிக்கெட், சிட்டி ஆப் கார்ட் போன்ற மலையாள படங்களில் அவர் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். திரையுலக அறிமுகம் காரணமாக அவருக்கு சின்ன திரையில் ஏராளமான வாய்ப்புகள் குவிய துவங்கியதில் அடுத்தடுத்து பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். மேலும் சில சீரியல்களை அவர் தயாரித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான ரெஞ்சுஷா மேனன் சீரியல்கள் தயாரித்து வந்ததில், பண நெருக்கடியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெஞ்சுஷாவின் மரணம் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.