வவுனியாவில்..
பளுதூக்கும் போட்டியில் வவுனியாவில் உள்ள கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொலன்னறுவையில் நேற்று முன்தினம் (05.11.2023) இளைஞர், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டி இடம்பெற்றிருந்தது.
இந்த போட்டியில் வவுனியா கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.கு றித்த போட்டியில் க.அபிசாளினி மற்றும் பா.மதுசாளினி – முதல் இடத்தையும் பா.கிசாளினி மற்றும் பா.செரோண்யா – இரண்டாம் இடத்தையும் பெற்று வவுனியா பளுதூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர், ஞா.ஜீவன் பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு தற்காலத்தில் வடமாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.