இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை : உடன் அமுலுக்கு வரும் தடை!!

900

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கையில் கிரிக்கெட் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் மற்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநீக்கத்தின் நிபந்தனைகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிரிக்கெட் நிறுவனத்திற்குள் பல்வேறு மோடிகள் இடம்பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

சமகால நிர்வாக சபையை முழுமையாக கலைத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.