கொழும்பு தாமரை கோபுரத்தில் அப்சீலிங் சாகச விளையாட்டு ஆரம்பம்!!

732

இலங்கையில்..

இலங்கையில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்சீலிங் என்பது உயரமான இடத்திலிருந்து செங்குத்தாக கீழே இறங்க கயிற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தும் சாகச விளையாட்டாகும்.

தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு தற்போது பரீட்சத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில், பொதுமக்கள் மருத்துவரின் சான்றளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் சாகசத்தை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பரிட்சார்த்த நிகழ்வில் ஈடுபடும் குழாமினுடைய செயற்பாடுகளை தொடரும் காணொளியில் காணலாம்…