ஜூன் மாதம் 28 ஆம் திகதி நயினை நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
11.07./2014 தேர் உற்சவம்
12.07.2014 தீர்த்த உற்சவம்
13.07.2014 பூங்காவனம் (தெப்போற்சவம்) என்பவற்றுடன் நிறைவு பெறும்.
திருவிழாவுக்கென அலைகடல் என திரண்டுவரும் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து வசதிகள் மற்றும் அவர்களின் பசியினை போக்கிட திருவிழா காலங்களில் அடியவர்க்கு
அமுதசுரபி அன்னதான சபையின் ஏற்பாட்டில் விசேட அன்னதானம் வழங்குவதற்கென அன்னதான சபை தொண்டர்களும் முழுமூச்சாக செயற்பட்ட வண்ணம் உள்ளனர்.
திருவிழா தொடர்பான பதிவுகள் மற்றும் காணொளிகள் நயினை மண்ணில் இருந்து நயினை குமரன் மற்றும் நயினை வரன் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன் உங்கள் வவுனியா நெற் வழியாக உள்ளூர் வெளியூர் மற்றும் புலம்பெயர்நாடுகள் எங்கும் வசிக்கும் பக்தர்களின் வீடுகளை வந்தடையும். தொடர்ந்தும் வவுனியா நெற்றுடன் இணைந்திருங்கள்.
-பண்டிதர்-