சதாம் உசேனை தூக்கிலிட்ட நீதிபதியை தீர்த்துக்கட்டிய தீவிரவாதிகள்!!

704

Sadam

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு ஐ.எஸ்.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ம் ஈராக்கில் சன்னி பிர்வை சேர்ந்த சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்தபோது அவர் ஷியா பிரிவன இஸ்லாமியர்களை கொன்று குவித்து வந்தார். இதனால் அவருக்கு எதிராக போர் தொடுத்த அமெரிக்காவிற்கு ஷியா பிரிவினரும் ஆதரவளித்துள்ளனர்.

எனவே சதாமின் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி சென்றதால், பதுங்கு குழி ஒன்றில் தலைமறைவான அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் தீர்ப்பினால் கடந்த 2006ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில் சதாமின் மராணத்தால் ஷியா பிரிவினர் மீது ஆத்திரம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது ஈராக்கின் நகரங்களை அடுத்தடுத்தாக கைபற்றி வருவதுடன் ஷியா பிரிவினர்களை சரமாரியாக தாக்கியும் வருகின்றனர்.

மேலும் சதாமிற்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானிற்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

இத்தகவலை சதாம் உசேனின் உதவியாளராக இருந்த இப்ராஹிம் அல் தெளரி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்திருந்தபோதும், இதுகுறித்து ஈரான் அரசாங்கம் மெளனம் சாதித்து வருகிறது.

620-100 Final