அவுஸ்திரேலியாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் நிர்வாணமாக கடற்கரையில் குளித்து கோடைகால சங்கராந்தி விழாவை கொண்டாடினார்கள்.
அவுஸ்திரேலியாவின் ஹோபாட் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் MOFA திருவிழாவின் ஒரு பகுதியான கோடைக்கால சங்கராந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் நிர்வாணமாக தலையில் சிவப்பு தொப்பி அணிந்து காலை 8 மணியளவில், 6 டிகிரி வெப்பநிலையில் குளிரை தாங்கமுடியாமல் கத்திக் கொண்டே நீரில் குளித்தனர். இந்த விழாவில் மக்கள் அனைவரும் கூச்சலிட்டு கடற்கரையில் குளித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கடந்த வருடம் பங்கேற்ற ஹாபார்ட் நகர மேயர் டமான் டேவிஸ் கூறுகையில், ஹாபார்ட் நகர கடற்கரையை நிர்வாண தளமாக மாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.







