புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 43 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 175 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதில் மாவட்டத்தில் முதல் நிலை உட்பட 43 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மேலும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 138 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.