வவுனியா, செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் ரமேஸ்குமார் தனுஸ்கா 165 புள்ளிகளையும், றொனால் றீகன் குயின்சிலின் 163 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இரு மாணவர்கள் சித்தியடைந்து அந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.