கணவன் – மனைவியின் மோசமான செயல்!!

1241

மில்லனியவில்..

ஹொரண – மில்லனிய பிரதேசத்தில் இளம் விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த தங்க நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்ற கணவன் – மனைவி தம்பதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து அந்த பணத்தில் சுற்றுலா பயணம் சென்றதும் தெரியவந்துள்ளது. இளம் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தர் ஒருவரை வெறிச்சோடிய வீடொன்றுக்கு இந்த தம்பதி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை தாக்கி அவரிடம் இருந்த தங்கப் பொருட்களையும் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.