வெளிநாடொன்றில் இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

968

இத்தாலியில்..

இத்தாலியில் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இத்தாலியின் Voghera தொடருந்து நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ(46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தொடருந்து நடைமேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது,

அதிவேகமாக பயணித்த தொடருந்தின் வேகத்தினால் ஏற்பட்ட காற்றினால் தள்ளுப்பட்டதாக இத்தாலியில் வசிக்கும் எமில் ரொஹான் என்பவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.