உலகக்கோப்பை கிரிக்கெட்டால் பறிபோன உயிர்.. தந்தையே மகனுக்கு எமனான சோகம்!!

646

உத்தரப்பிரதேசத்தில்..

இந்திய மாநிலம், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்த்த போது டிவியை ஆஃப் செய்த மகனை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவருடைய மகன் தீபக். கடந்த 19 -ம் திகதி உலகக்கோப்பை இறுதி போட்டியானது, இந்தியாவுக்கும் ஆன்ஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்றது.

இப்போட்டியை கணேஷ் பிரசாத், தனது வீட்டில் இருந்த டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சாப்பிடுவதற்கு உணவு சமைத்துவிட்டு கிரிக்கெட்டை பாக்குமாறு தீபக், கணேஷ் பிரசாத்திடம் கூறியுள்ளார்.மேலும், டிவியை தீபக் ஆஃப் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கணேஷ் பிரசாத் செல்போன் ஜார்ஜ் வயரால் தீபக்கின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே தீபக் உயிரிழந்தார். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த தந்தை கணேஷ் பிரசாத்தை பொலிஸார் கைது செய்தனர்.