வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக மரணம்!!

877

மாவனெல்லவில்..

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டின் அருகே சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதி உயிரிழந்துள்ளார். தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (23.11.2023) மாலை 5.20 மணியளவில் மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன், மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.