வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (25.06) காலை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான திரு.சிவநாதன் கிஷோர், அவரது பாரியார் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-பண்டிதர்-