டிசம்பர் மாதத்திற்குள் ஐம்பது வீதத்தால் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!!

429

மரக்கறிகள்..

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் மரக்கறிகளின் விலை ஐம்பது வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாறு எதிர்வரும் மாதம் ஐம்பது வீதத்தால் மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,காலநிலை மாற்றம் காரணமாக மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.

அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மரக்கறி விலைகள் வழமைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.