மீண்டும் இருளில் மூழ்கவுள்ள இலங்கை!!

699

இலங்கையில்..

பராமரிப்பு பணிகள் காரணமாக, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி தற்போது செயலிழந்துள்ளது.

இந்த மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டும் அதிக நேர மின்வெட்டு ஏற்படலாம் என அந்த சபை தெரிவித்துள்ளது.