வவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்!!

2803

வவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் தினநிகழ்வு இன்று (27.11.2023)இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச் சுடரினை மாவீரர்களான உமாசங்கர் மற்றும் கஜலட்சுமி ஆகியோரின் தாயாரான வள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது.

ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.