தனது மனைவியை கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் 16 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணத்தினால் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது.
பதஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (26) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.