வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவான மாணவி!!

1945

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான இரண்டாம் மொழி (சிங்களம்) தரம்-6 எழுத்தாக்கப் போட்டியில் கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை மாணவி ரவிக்குமார் சதுர்சிகா இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

இம் மாணவி வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமையுடன் இந்நிலையை அடைய வழிப்படுத்திய ஆசிரியர் நிரஞ்சலா ஶ்ரீநவதீபன், அதிபர் புனிதவதி கிருபராசா, இரண்டாம்மொழி (சிங்களம்)ஆசிரிய ஆலோசகர் யோ.முகுந்தன் ஆகியோரை பாடசாலை சமூகம் பாராட்டி மகிழ்கின்றது.

வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவான முதல் மாணவி என்ற பெயரையும் தனதாக்கி கொண்டுள்ளார் மாணவி ரவிக்குமார் சதுர்சிகா.