வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கடந்த 10.06.2014 அன்று மஹிந்தோதய தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் செ. தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சர் கௌரவ. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் யு.றிஸாட் பதியுதீன் அவர்களும், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.