தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம் புகுந்த மன்னாரை சேர்ந்த ஏழு பேர்!!

461

மன்னாரில்..

மன்னாரில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இவர்கள் படகுமூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டிற்கு அகதியாக சென்று இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்குச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.