
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் நேற்று கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் தன் பழைய நினைவுகள் பற்றி பேசிய கமல் பின்னர் அரசு பற்றி கூறுகையில், சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை.
இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன் ஆனாலும் சினிமா இயங்கிக் கொண்டுதானிருக்கிறது.
மேலும் இங்கு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.






