பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளில் குப்பைகளை வீசியெறிந்த சுமார் எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்றை வரை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான புகார்கள் எட்டாயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. அதன் பேரில் எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று பொலிஸ் திணைக்களத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இ்வ்வாறான சம்பவங்கள் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களும் அதிகளவில் பரவும் அபாயம் காரணமாகவே வீதிகளில் குப்பை வீசுகின்றவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குயிண்டஸ் ரேமண்ட் தெரிவித்துள்ளார்.