வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று 28.06.2014 சனிகிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது .
வழமைபோல் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தும் வகையில் பால்குடம் காவடிகள் தூக்கு காவடிகள் மற்றும் கற்பூரசட்டிகளுடனும் பெரியவர் சிறியவர் என வேறுபாடின்றி ஆலயத்தினை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
விசேடமாக வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏராளமான காவடிகள் தூக்குகாவடிகள் மற்றும் பெண்களின் பாற் குடபவனி என்பனவும் சின்னமேளம் மயிலாட்டம் மற்றும் ஓயிலாட்டதுடன் வவுனியா நகர வீதி வழியாக பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் நோக்கி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருகின்றனர்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் பக்தர்களின் வேண்டுகோளிற்கு அமைய வவுனியா நெற் இணயத்தளம் நேரடி இணைய ஒளிபரப்பில் ஈடுபட்டவண்ணம் உள்ளது .
இன்று மாலை இடம்பெறும் நிகழ்வுகள் பூஜைகள் பொங்கல் உற்சவம் மற்றும் கலை நிகழ்சிகள் என்பனவும் வவுனியா நெற் இணையம் ஊடாக உங்களை வந்தடையும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.
இன்றைய இரவு நேர கலை நிகழ்வுகளை இரவு 8 மணிமுதல் வவுனியா நெற் ஊடாக நேரடியாக கண்டுகளிக்க முடியும்.