யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோடீஸ்வரன் தர்மிகா என்ற 22 வயதான நபரே வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளார். தாய்க்கும் தந்தைக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையை மகள் தடுக்கச் சென்ற வேளை தந்தை மகளை வாளால் வெட்டியுள்ளார்.