இணையத் தளங்கள் ஊடாக சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டோர் கைது!!

369

Abuse

இணையத் தளங்களின் ஊடாக சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களை புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுவரையில் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அரசாங்க உத்தியோகத்தர்களும் நிபுணர்களும் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதுவரை 2000 பேர், இணையத்தளங்களின் மூலமாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.

இணையத்தளங்களுக்கூடாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தள புலானாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறியவரும்போது 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.

இச்சம்பவங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேணடும்.

இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் மிகுந்த புத்திசாலிகளாகக் காணப்படுவதால் சிறுவர்களும் இதுகுறித்து மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.