இரண்டாம் ஆண்டில் வவுனியா நெற்றின் புதிய சரித்திரம் : வன்னி மண்ணில் இருந்து வெற்றிகரமாக முதன் முதலில் நாள் முழுவதும் இணைய நேரடி ஒளிபரப்பு!!

314

வவுனியா நெற் இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்துவைத்த நிலையில் அது தனது வளர்ச்சியின் பாதையில் புதிய அத்தியாயமாக முதன் முறையாக நாள் முழுவதும் தனது இணைய நேரடி ஒளி பரப்பினை வெற்றிகரமாக செய்து அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடும் தொழில்நுட்ப சிரமங்களுக்கு மத்தியிலும் தனது நேரடி ஒளிபரப்பு நிகழ்வினை அநேக வாசகர்களின் வேண்டுகோளுக்கமைவாக தன்னிடம் உள்ள வளங்களை கொண்டு வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

கடந்த ஆண்டும் வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நிகழ்வுகள் அனைத்தும் வவுனியா நெற் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014 நேரடி ஒளிபரப்பு நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்க ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள் மற்றும் வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014 ஏற்பாட்டுக்குழு அத்துடன் ஆலய நிர்வாகசபை மற்றும் வாகன வசதிகள் வழங்கியோர், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விளம்பர அனுசரணையாளர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் தன்னுடைய மனபூர்வமான் நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறது.

உங்களின் மனப்பூர்வமான பங்களிப்பால் தான் இது சாத்தியமாயிற்று. தொடர்ந்தும் வவுனியா நெற்றுடன் இணைந்திருங்கள்.

-நன்றிகளுடன் வவுனியா நெற் நிர்வாகம்-

11 12 13 14 15