யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள் : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

593

தாய்வானில்..

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ள சம்பவம் ஒன்று தாய்வானில் பதிவாகியுள்ளது.

தாய்வானில் சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினால்,

அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் அறுவை சிகிச்சையின் மூலம் கற்கள் அகற்றப்பட்ட நிலையில் , சியோ யு தற்போது நலமுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.