வவுனியாவில் இடம்பெற்ற சித்துவிலி சித்தம் ஓவியப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!!

810

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான சித்துவிலி சித்தம் ஓவியம் சுவரொட்டி மற்றும் கேலிச்சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று 22.12.2023 வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு P.A.சரச்சந்திர(அரச அதிபர் -வவுனியா) அவர்களும் திருமதி.தாட்சாயினி (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு) திருமதி சுபாலினி வசந்தகுமார் (ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு) திரு.திருலிங்கநாதன்(மாவட்ட கலாசார உத்தியோகத்தர் வவுனியா) திருமதி.S. ஜெயசித்ரா (பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா)பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.