பசியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் : இலங்கையில் நடந்த சோகம்!!

1929

கம்பளையில்..

கம்பளை – நாவுல்ல பகுதியில் பாக்கு பறிக்கச் சென்ற இளைஞன் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு நாட்களாக பட்டினியாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி.ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக கம்பளை நாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த,

30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாப்பாடு இல்லாமல் பசி தாங்க முடியாமல் பாக்கு பறிக்க சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.