மரண அறிவித்தல் : ஆறுமுகம் மதியாபரணம்!!

11569

மரண அறிவித்தல் : ஆறுமுகம் மதியாபரணம்!!

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும்,பெரியதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், மெனிக்பாம் செட்டிகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியாபரணம் இன்று 17-01–2024 காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும் கமலாதேவியின் கணவரும், விஜயகுமார், மகிழா,கோடீஸ்வரன்,வேணி,முகுந்தன்,விநோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாமில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிஜைகளுக்காக நாளை மதியம் 2 மணியளவில் மெனிக்பாம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன் – முகுந்தன்
Mobile : +94 0772358453